Saturday, August 14, 2010

தில்லியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பயிற்சி முகாம்

புது தில்லியில் ஆகஸ்டு 2ஆம் தேதி திங்கள்கிழமை , இளைஞர் காங்கிரஸ் பயிற்சி முகாம் நடைபெற்றது.  தமிழகத்திலிருந்து மாநில நிர்வாகிகள் 10 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களில் இளைஞர் காங்கிரல் தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலங்களில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு புது தில்லியில் 4 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

திங்கள்கிழமை தொடங்கிய இந்த முகாம் 4 நாட்கள் நடைபெற்றது . 9 மாநிலங்களில் இருந்து 90 பேர் பங்கேற்ற இந்த பயிற்சி முகாமில் ராகுல் காந்தியும் பங்கேற்றார். தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, துணைத் தலைவர் வரதராஜன், பொதுச்செயலாளர்கள் மகேந்திரன், பிரபு, காயத்ரி, ஹமீது ஷகீர் அப்பாஸ், விஜய் இளஞ்செழியன், அர்த்தநாரி, சத்யா, மோகனம்மாள் ஆகிய மாநில நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.