Monday, August 16, 2010

IYC தேசிய செயலாளர் மகேந்திரனுக்கு வரவேற்பு

இந்திய இளைஞர் காங்கிரசில் தேசிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. மகேந்திரனுக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

படம் : தினமலர்

Saturday, August 14, 2010

இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் மகேந்திரன் பேச்சு

 "காங்கிரஸ் கட்சியில் இனி வாரிசு அரசியல் மற்றும் பணபலத்துத்துக்கு இடமில்லை. உழைப்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும்' என்று இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் மகேந்திரன் தெரிவித்தார்.

இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய செயலாளர்களாக தமிழகத்தைச் சேர்ந்த மகேந்திரன், ஜோதிமணி இருவரும் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.
இருவரும் தமிழகத்தில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் மாநிலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

அகில இந்திய செயலராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சென்னை வந்த மகேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு புதன்கிழமை வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கடந்த ஜூலை 14-ம் தேதி தமிழகத்திலிருந்து மாநிலப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை ராகுல் காந்தி தில்லிக்கு அழைத்திருந்தார்.

அங்கு அவர் நேர்காணல் நடத்தி சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்த என்னை இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய செயலராக நியமனம் செய்துள்ளார்.

இதன் மூலம் காங்கிரஸில் வாரிசு அரசியல் மற்றும் பணபலத்துக்கு இடமில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. கட்சிக்காக உழைப்பவர்களுக்கு மட்டுமே இனி காங்கிரஸில் முக்கியத்துவம் கிடைக்கும். எனக்கு கிடைத்துள்ள இந்தப் பொறுப்பு தமிழகத்தில் உள்ள 12.5 லட்சம் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு கிடைத்த கௌரவமாகும் என்றார்

நன்றி : தினமணி : 12.08.2010

தில்லியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பயிற்சி முகாம்

புது தில்லியில் ஆகஸ்டு 2ஆம் தேதி திங்கள்கிழமை , இளைஞர் காங்கிரஸ் பயிற்சி முகாம் நடைபெற்றது.  தமிழகத்திலிருந்து மாநில நிர்வாகிகள் 10 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களில் இளைஞர் காங்கிரல் தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலங்களில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு புது தில்லியில் 4 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

திங்கள்கிழமை தொடங்கிய இந்த முகாம் 4 நாட்கள் நடைபெற்றது . 9 மாநிலங்களில் இருந்து 90 பேர் பங்கேற்ற இந்த பயிற்சி முகாமில் ராகுல் காந்தியும் பங்கேற்றார். தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, துணைத் தலைவர் வரதராஜன், பொதுச்செயலாளர்கள் மகேந்திரன், பிரபு, காயத்ரி, ஹமீது ஷகீர் அப்பாஸ், விஜய் இளஞ்செழியன், அர்த்தநாரி, சத்யா, மோகனம்மாள் ஆகிய மாநில நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.

இந்திய தேசிய இளைஞர் காங்கிரஸ்




இந்த வலைப்பதிவின் மூலம் இந்திய தேசிய இளைஞர் காங்கிரஸ் செயல்பாடுகள் பற்றிய செய்திகளை பகிர்ந்துக் கொள்ளப் போகிறோம்.. ராகுல்காந்தியின் நிலைப்பாடுகள், தேசிய மற்றும் தமிழக இளைஞர் காங்கிரசின் செயல்பாடுகள் மற்றும் செய்திகள் ஆகியவை தொடர்ந்து வலையேற்றப் படும்.